முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ரஞ்சன் ராமநாயக்க நேற்று (02) ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றிருந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு தொடர்பான சில ஆவணங்களைப் பெறவே அங்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை எதிர்பார்ப்பதற்காக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டபோதும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பூரண மன்னிப்பு வழங்குவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.