முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
மற்றும் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 29 ஆம் திகதி விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக 2,000 கோடி ரூபாவை அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.