1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொது மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம்  ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெறுகின்றது. திட்டத்தில் விளம்பரத்தைத் தடுக்க சுகாதார ஊக்குவிப்பு பணியகம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவியை நாடியுள்ளது.

தேசிய வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய விளம்பரத்தை நிறுத்த தலையிடுமாறு  கோரி சுகாதார திணைக்களத்தின் பிரதி  சுகாதார பணிப்பாளர் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனக சுனேத் பண்டார "தனிப்பட்ட கடிதம்" ஒன்றை வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பி வைத்ததுடன் அதனை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல, “போத்தலில் அடைத்த பால் " எவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மே 18 அன்று அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளளார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய இந்த கடிதத்தை ஜனக சுனேத் பண்டார பொதுமக்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பு, வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை அறிஞர்கள் குழுவும் படித்துள்ளனர். 

“அந்த நேரத்தில் ரூபவாஹினியில் தற்போதைய தலைவர், விளம்பரத்தில் இருந்து பால் மா போத்தலை அகற்றுமாறு முன்னாள் சுகாதார செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயதிலகவை கேட்டுக் கொண்டார். படைப்பாளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் அதை எதிர்த்து, போத்தலில் அடைக்கப்பட்ட பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

அவரது  அறிக்கையில் ஊடகங்களில் விளம்பரம் வெளியான பின்னர் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தங்கள் ஆட்சேபனையை எழுத்து பூர்வமாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஜனக சுனேத் பண்டார வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனியவுக்கு அனுப்பியுள்ளார்.

பன்னாட்டு பால் மா விவகாரத்தில் தலையிடுமாறு ஜனக சுனேத் பண்டார எழுதிய கடிதத்தை கவனத்தில் கொண்டு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ) இதில் தலையிட்டுமுடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். பன்னாட்டு பன்னாட்டு பால் மா கம்பணிகளின் நிதியூடாக தங்கள் தேசிய கடமைகளில் பலர் தவறிழைத்துள்ளார்கள் என்ற சமூகக் கருத்து உள்ளது இதை ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி