கொரோனா வைரசை விட டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகமாகும். அரசாங்கத்தின் கூற்றுப்படி டெங்கு நோயால் கடந்த ஐந்து மாதங்களில் இலங்கையில் குறைந்தது இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த காலகட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 19,474 ஆக பதி வாகியுள்ளது .
தேசிய சுகாதாரத் துறையின் தரவுகளின் படி இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற் சிறப்பு கலந்துரையாடலின் போது இது தெரியவந்துள்ளது.
ஆரோக்கியம்
இந்த விவாதம் மே 28 வியாழக்கிழமை அமைச்சில் நடைபெற்றது என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் 105,049 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டதோ டு 150 இறப்புகள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சர் கலந்துரையாடலில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், ஏனெனில் மழை தொடங்குவதால் டெங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் கொரோனாவும் இப்போது இருப்பதால் நிலை மை மோசமாகிவிடும் என்றார்.
இலங்கையின் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (சிபிஏ) ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, டெங்கு மற்றும் எலி காய்ச்சல் ஆகியவை இலங்கையின் சுகாதார அமைப்பில் தாக்கத்தை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிதுள்ளனர்.
"எங்கள் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, டெங்கு காய்ச்சல் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் ஆகியவை இலங்கையில் உள்ள சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தில் ஓரளவிற்கு அதிகரித்து வருகின்றன."
இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ ரோஹனாவின் கையொப்பத்துடன் ஏப்ரல் 29 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.