பத்திரிகையாளர் நடேசனை சுட்டுக்கொன்ற கொலைகாரர்களை இலங்கை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.அவரது 11 வது நினைவேந்தலுக்காக உளவுத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் ஊடக மன்றத்தின் துணைத் தலைவர் ஊடகவியலாளர் நடேசன் மே 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு 16 வருடத்தை நினைவுகூறும் வகையில் யாழ்ப்பாண ஊடகக் கழகத்தின் நினைவாக ஏழு பத்திரிகையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டாலும், பாதுகாப்புப் படையின் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொலிஸ் சீருடையில் இருந்தவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என சந்தேகப்படுவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்
கொரோனா வைரசின் போது பின்பற்றப்படும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிந்து ஊடகவியலாளர்கள் பங்கேற்ற போதிலும், பாதுகாப்புப் படையினர் யாரும் இதனை பின்பற்றவில்லை என்பதை ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
கொலை செய்யப்பட்ட சகோதர பத்திரிகையாளருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்த யாழ்ப்பாண ஊடக சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் அவர்கள் சுதந்திரமாக நினைவுகூறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்னம் தயாபரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன் கிழக்கு மாகாண சிரேஸ்ட ஊடகவியலாளாலர்களும் மே 31 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளாகத்தில் நடைபெற்றது.
நடேசனுக்காக சிறிது நேரம் மௌனமாக நின்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
சங்கத்தின் தலைவரான தேவா அய்ரன் தலைமையில் நடைபெற்ற நினைவு விழாவில் ஊடகவியலாளரும் நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன் சிறப்புரையாற்றினார்.
வவுனியா தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கமும் ஜூன் 1 ஆம் திகதி அ வர்களது அலுவலகத்தில் உரையாற்றவுள்ளது
நடேசனின் புகைப்பட த்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004 மே 31, கொலை தொடர்பாக கருணா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது
2004 மே 31, காலை, ஊடகவியலாளர் நடேசன் மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ் பத்திரிகை மன்றத்தின் துணைத் தலைவர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவோ அல்லது உயிருக்கு பயந்து தப்பி ஓடவோ கட்டாயப்படுத்தப்பட்டனர்.
சர்வதேச மனித மனித உரிமைகள் கண்காணிப்பகம் (எச்.ஆர்.டபிள்யூ) என்ற உரிமைகள் அமைப்பு கருணா பிரிவை குற்றம் சாட்டியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான நடேசன் வீரகேசரி, ஐபிசி தமிழ் உட்பட பல கனேடிய ஊடகங்களுக்கும் செய்தியாளராக இருந்தார்.