இன்று (9) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியினால் நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் திடீரென நுழைந்தமை சட்ட விரோதமாகும் என்பதற்கு புகைப்படச் சான்றுகள் வெளிவந்துள்ளன.
சமூக இடைவெளியை பாதுகாத்து அமைதியாக நடைபெற்று எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் தீடீரென நுழைந்தமை அடிப்படை மனித உரிமை மீறலாக இருப்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் சுகாதார பாதுகாப்பும் பொலிஸாரினால் வேண்டுமென்றே ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
சான்று பகரும் புகைப்படங்கள்
லங்கா வியூஸ்