பிரதமரும் அவரது கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை எதிர்ப்பது என்பது ராஜபக்க்ஷர்களின் தேவைகளுக்கு என்பதில் சந்தேகம்
இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கே கூறுகிறார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சியின் முடிவால் தனது எதிர்கால அரசியலை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
நெத் எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தத் தேர்தலின் சில முடிவுகளில் எங்கள் அரசியல் முடிவு செய்யப்படலாம், ஏனென்றால் நாங்கள் ஒரு அரசியல் வெற்றியை விரும்புகிறோம். இதை நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
என்னிடம் எந்த ஒழுக்க விசாரணைகள் மேற்கொண்டாலும் இதை நான் கூறுகிறேன். இது ஒரு ஒப்பந்தமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.