ஜனாதிபதி வேட்பாளராக தம்மை களமிறக்குமாறு தான் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்திகள்
அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றின் மூலமாக அவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் எனக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே தான் கடந்த 17ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்