ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அலரிமாளிகை
வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி வீழ்ச்சியடையாமல் தடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் இன்று அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே பிரதமர் இந்த முடிவை எடுத்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துளள்ன.