ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பெசில் ராஜபக்ஷவினால் திவிநெகும நிதி துஷ்பிரயோக வழக்கை நீதிபதி கிஹான்
குலதுங்க முன்னிலையில் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகு நிதியத்திற்குரிய இரண்டு கோடி 94 இலட்சம் ரூபாய் செலவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான ஐம்பது இலட்சம் கலண்டர்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதன் ஊடாக அரச பணம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிரி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.