1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியலிருந்து விலகியிருந்த முன்னாள் அமைச்சர்  உபாலி பியசோம நேற்று (26) மீண்டும் “சிரிகொத்தா” கட்சி தலைமையகத்திற்கு

வருகை தந்து ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து அவரது தேர்தல் பிரசாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களை  மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உபாலி பியசோம “ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின்” உப செயலாளராகும்.

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த அழைப்பிற்கு அமைய ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் தற்போது சஜித் பிரேமதாசவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி