கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களின் முகாமைப் பிரதிநிதித்துவப் படுத்திச் செயற்பட்ட குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஆதரவை வழங்க முன்வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. நாவின்ன மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.