கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டுயிடுவதற்கு ஏதேனும் சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு இருக்கும் வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றாரா என்பது தொடர்பில் 'slguardian.org' இணையத்தளம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கடந்த வருட ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேனாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என ராஜபக்ஷக்கள் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயேயாகும்.
எவ்வாறாயினும் அந்த வாக்குறுதியை முற்றாக மறந்து விட்டு “மொட்டு கட்சியின்” ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் தீா்மானித்தது ஜனாதிபதியின் மனவேதனைக்கு காரணமாக அமைந்திருந்தது.