ஸ்ரீ.ல.சு.கட்சி தாமரை மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்தால் சுயேட்சை வேட்பாளராக
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
இதனடிப்படையில் அவர் இவ்வார இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பதிலாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் குமார வெல்கம கூறியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.