கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடை செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை
தள்ளுபடி செய்வதற்கு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று (04) மாலை ஏகமானதாகத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அந்த மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோருக்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சில அவ்வாறான குறிப்புக்களினால் இரண்டு மனு தாரர்களுக்கும் ஒரே மாதிரியான மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, சிலர் மறைமுகமான முறையில் அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். ராஜபக்ஸவாதிகளுள் ஒருவரான அகில ரொஹான் தனது முகநூல் பக்கத்தில் மறைமுகமான முறையில் கீழ்கண்டவாறு அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த முகநூல் பதிவுக்கு பதிலளித்துள்ள ஒருவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தீர்ப்பு கிடைத்து சற்று நேரத்திலேயே இவ்வாறென்றால் நாட்டின் முழு அதிகாரங்களும் கிடைத்தால் என்ன நடக்கும்?”