நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு ஆதரவு வழங்க தான் ஆயத்தமாக உள்ளதாக அத்துரலியே ரதன தேரர் கூறியுள்ளார்.
அடிப்படைவாத தேரர் ஒருவராகக் கருதப்படும் அத்துரலியே ரதன தேரர், பல அமைபபுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள விஜயதரணி தேசிய சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் இன்று (05) மாலை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் வைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு விஜயதரணி தேசிய சபையின் கொள்கை வெளியீடு வழங்கி வைக்கப்பட்டது.