ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக ஆதரவு வழங்க மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வெளிவிவகார
அமைச்சராகவும் நல்லாட்சி அரசின் கிழக்கு மாகாண ஆளுநராகவும் இருந்த ரோஹித் போகொல்லாகம முன்ழந்துள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தின் போது அமைச்சர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் களணி ரஜமகா விகாரைக்கு சென்ற போது அவருக்கு அங்கு ரோஹித் போகொல்லாகமவினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தனக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாசா ரோஹித் போகொல்லாகமவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.