சிறிலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தாமரை மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை 9.46 சுப நேரத்தில் வேட்புமனுவில் ஒப்பமிட்டார்.
நுகேகொடை மிரிஹானவில் அமைந்துள்ள கோத்தாபயவின் இல்லத்தில் வைத்தே அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டதோடு இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் மாற்று வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ஏற்கனவே கட்டுப்பணத்தைச் செலுத்திய சமல் ராஜபக்ச, கூட்டு எதிர் கட்சியின் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.