1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அனேகமான ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி

அமைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு கட்சியை மீளக் கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வருகின்றது.

இதனிடையே ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (10) காலை கூடி பேசியுள்ளதாகவும் அறிய வருகின்றது. இந்த நிகழ்வில் சுமார் 40க்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில் கடும் எதிர்ப்புக்களை் தெரிவித்து அவர்கள் அங்கு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க வெல்கமவும் முன்வந்தார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நெத் நிவ்ஸ் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை தான் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.  எனினும் நடைபெறவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது அமைதியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி