நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினரான அஜந்த சொய்ஷா போட்டியிலிருந்து விலகி ஜனாதிபதி
வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார். அவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவின் கொள்கைப் பிரகடணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடா்பில் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.