திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு பூரண
ஆதரவு வழங்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தவறான தீர்ப்பு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் கூட்டமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் வரவேற்றுள்ளன