இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளை திங்கட்கிழமை அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி முன்னால் புதிய
ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நாட்டு மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவ்வாறே பாதுகாப்பதற்கு உறுதியளிப்பதாக இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது வெற்றி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தனது உரையில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, காணாமல் ஆக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் உரிய வகையில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.