அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன ஆகியோர் தமது அமைச்சுப்
பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
தனது உத்தியோகபூர்வ டுவீட்டர் கணக்கின் ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள றுவன் விஜேவர்தன, தான் புதிதாக வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
அதேபோன்று இலங்கையை முன்னே கொண்டு செல்வதற்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பிளவுபடாத இனத்தை கட்டியெழுப்புவதற்குத் தமக்கு முடியுமாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் றுவன் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.