ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவிக்கின்றது.
அதே வேளை புதிய கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 05 ம் திகதி கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 10ம் திகதி கூடப்படும் கூட்டத்தில் மேலதிக விடயங்கள் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சி வட்டார தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
புதிய பாதை: சஜித் சம்பிக்கவுடன் புதிய பயணம்
புதிய கூட்டணி தொடர்பாக மக்களை தெளிவுபடுத்துவதற்காக சஜித் பிரேமதாச நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
கூட்டணியின் புதிய தேர்தல் பிரச்சாரக்கூட்டம் பெப்ரவரி 09 ம் திகதி பி.ப 2.45 மணியளவில் தலவதுகொடவில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றது.