குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் செய்த முறைப்பாட்டினை விசாரணை செய்யாமை மற்றும் தனது தனிப்பட்ட தொலை பேசி உரையாடலை அநாவசியமாக திரிபு படுத்தி பகிரங்கப்படுத்தியமை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு செய்துள்ளார்
தனது தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 23 ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தார்.