கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
வருகின்ற பொதுதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பவர்களையே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன் 19 தாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டுமாயின் பெரும்பாண்மை பலம் அவசியமாக தேவைப்படுகின்றது பல அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் அந்த தடைகளை உடைத்துக்கொண்டு நாம் இதில் வெற்றி பெற வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதாக தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.