யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நான் அப்பாவுடன் செல்கிறேன் தாய் கணவர் ஆகியோருடன் மன்னிப்பு கேட்கிறேன். மகனை நன்றாக பார்க்கவும் என்ற வாசகங்கள் அடங்கலான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிசார் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.