ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் மங்கள சமரவீர எடுத்துக்கொண்ட செல்பிப் புகைப்படம் பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உண்மையாகவே ராவய ஆசிரியர் விக்டர் ஐவர் கூறுவது போல இன்று தேவையில்லை என்று ஒதுக்கப்படும் ரஞ்சன் நாளை மக்களால் பாரட்டப்படுவார். இந்த சமூகம் நாறிக்கிடக்கின்றது.பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஏற்படுத்திய சமூக அதிர்வலைகளை இலங்கை மக்கள் வெகுவிரைவில் புரிந்து கொள்வார்கள்.
அதுதான் உண்மை நடைமுறையிலிருக்கும் சமூக அமைப்பில் ரஞ்சனது குரல் பதிவு வெளியில் வந்தது.இதனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் ரஞ்சனை புதிய கூட்டயினில் கலமிரக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.