சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுதேர்தலில் புதிய கூட்டணி ஊடாகவே போட்டியிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.விரைவில் அது பற்றி தெரியப்படுத்துவோம் அத்துடன் புதிய கூட்டணியில் விலகவும் இணையவும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் .
`