கொலைக் குற்றச்சாட்டின் பேரில்
தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், மற்றுமொரு வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காயமடைந்த அதிகாரிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தும்பறை சிறைச்சாலையில் இருந்து மஹியங்கனை வீதியூடாக மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதி, சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைக்காவலர் ஆகியோரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சிறைச்சாலை பஸ் தும்பறை சிறைச்சாலைக்கு திரும்பியதுடன் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதி பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.