தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்
வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்துக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அநுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், 2020 ஆம் ஆண்டு பொருளாதார பிரச்சினையால், சாரதி உரிம அட்டைகளுக்கு தேவையான அட்டைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் தற்காலிகமாக அச்சிடப்பட்ட சாரதி உரிமம் வழங்கப்பட்டது.
தற்போது தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காக ஆண்டுக்கு 9 முதல் 10 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடப்பட வேண்டியுள்ளாகவும் அவர் கூறுகிறார்.