தயாசிறி ஜயசேகர மற்றும்
பலர் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து கொள்ள இணங்கியுள்ளனர்.
முடிந்தால் இது தொடர்பில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெளியிடுமாறு தாம் சவால் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏலம் விட முயல்வதாகவும், மற்றொரு குழு தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக எமது கட்சியை மக்கள் சக்தியின் ஒற்றுமைக்கு காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.