ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதா உல்லா மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி ஆகியோர் காலியில் நடைபெறும் "ஏக்வா 'ஜெயகமு - அபி காலி' பொதுக்கூட்ட மேடையில் இணைந்து கொண்டுள்ளனர்.
இஷாக் ரஹ்மான் கடந்த பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கலாவெவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.