வடக்கின் பல அரசியல் கட்சிகள்
ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாகாணத்தின் மூன்று மூத்த அரசியல்வாதிகளின் பெயர்களை முன்மொழிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. சித்தார்த்தன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
அடுத்த இரண்டு வாரங்களில் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.