இந்த வருடத்தின் கடந்த
ஆறு மாதங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டவை என அந்த அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.
இது போன்ற பல முறைப்பாடுகள் மாதந்தோறும் பெறப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.