ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவளிக்குமாறு கட்சி தன்னிடம் கேட்டால் அதற்கு இணங்குவேன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று (29) அறிவிக்கப்படுவார் எனவும் அதுவரை பொறுமை காக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் நேற்று (28) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.