1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஹபராதுவ ஹருமல்கொட

பிரதேசத்தில் நேற்று  (28) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மீன் விற்பனையாளர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்  இதன்போது சுடப்பட்ட நபர் அருகில் இருந்த முச்சக்கர வண்டிக்குள் நுழைந்தபோது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருடன் பயணித்த மற்றுமொரு நபர் உடனடியாக முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடமிருந்து தப்பித்து சென்று பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி