எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று (29) நடைபெறவுள்ளது
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் மாலை 4.00 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ள அதேவேளை, அக்கட்சியில் இருந்து வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என மற்றுமொரு குழுவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதா அல்லது ஒன்றாக முன்னோக்கி செல்வதா இல்லையா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.