கல்கிஸ்ஸ பிரதான நீதிவான்
நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரைச் சுட்டுக்கொல்ல உதவிய ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இப்பாவல,பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தால் நடத்தப்பட்ட ஒரு வழக்குக்காக 2022 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள், ஒரு பிரதிவாதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், கொலைக்கு சதி செய்தமை மற்றும் உதவிய குற்றத்துக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.