1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அவிசாவளை புவக்பிட்டிய

தும்மோதர இலுக்பிட்டிய பிரதேசத்தில் சீமெந்து ஏற்றப்பட்ட  லொறி ஒன்று இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது.

இந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
உயிரிழந்த சார்ஜன்ட் உத்தியோகபூர்வ கடமக்க்காக கான்ஸ்டபிளுடன் சென்று கொண்டிருந்த போது, ​​சிமெந்து லொறி வீதியில் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி வருவதைக் கண்டு, மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்தியுள்ளார்.
 
இதன்போது, மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதுடன்  அருகில் காணப்பட்ட  கால்வாயில் கவிழ்ந்து லொறி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி