1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இளைஞனால் பாலியல்

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் 14 வயது சிறுமி ஒருவர் இது தொடர்பில் குளியாப்பிட்டிய கந்தனகெதர பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போது அங்கு வைத்து அந்தச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்  சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு செய்ய கடந்த 27ஆம் திகதி தனது தாயுடன் கந்தனகெதர பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
 
அப்போது சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறுமியை வேறு ஒரு பிரிவுக்கு  அழைத்துச் சென்று அந்த சிறுமியை சில்மிஷம் செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் இடம்பெற்ற உடனேயே சிரேஷ்ட   பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கு சென்று சந்தேக நபரான சப்-இன்ஸ்பெக்டரைக் கைது செய்ததுடன் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி