வத்தளை மாதாகொடையில்
உள்ள மூன்று மாடி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
90 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக 119க்கு தகவல் கிடைத்ததும் பொலிஸார் அங்கு சென்று பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழந்தவரின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.