1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலட்ச ரூபா பணத்துடன்

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர. பாண்டியன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

முல்லைத்தீவு - யோகபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
யோகபுரம் பகுதியிலிருந்து பாண்டியன் குளம் பகுதிக்கு 20 இலட்ச ரூபா பணத்துடன் நேற்று திங்கட்கிழமை மாலை சென்றுள்ளார். பின்னர்  இரவு 8.40 மணியளவில் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். 
 
இரவு நீண்ட நேரமாகியும் திரும்பி வராத காரணத்தால் , அவரது தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பு எடுத்தபோது தொலைபேசி செயலிழந்து காணப்பட்டுள்ளது. 
 
அதனை தொடர்ந்து இளைஞனை அவரது நண்பர்கள் தேடி சென்ற வேளை பாண்டியன்குள கரையில் அவரது மோட்டார் சைக்கிள் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 
 
அதனை அடுத்து குளத்தினுள் தேடிய போது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. 
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி