பொலிஸ் மா அதிபர் அல்லது
பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு மேலும் கோரிக்கை விடுப்பதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக் குழு தலைமைச் செயலகத்தில் கூடிய ஆராய்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் பிரச்சினை அங்கு நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மேலும் பல விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் கூடுவது இதுவே முதல் முறை.