1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான 42 மாணவர்கள் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை கட்டிடத்தின் கூரையில் இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்ததன் காரணமாக குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 மாணவர்கள் 10 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி