கொழும்பு கிராண்ட்பாஸ்
பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையைச் செய்வதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26, 37 மற்றும் 45 வயதுடைய ஒருகொடவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி கிராண்ட்பாஸ் செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் சென்ற இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.