மட்டக்களப்பு மாஞ்சோலை
பிரதேசத்தில் மௌலவி ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T- 56 துப்பாக்கிகள், 60 தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மௌலவி ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.