பெண் ஒருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சம்
பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தளைப் பகுதி காதி நீதிவான் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தாபரிப்பு வழக்கு ஒன்று தொடர்பில் 50,000 ரூபா இலஞ்சம் கோரிய நிலையில், குறித்த பெண்ணிடமிருந்து சந்தேக நபர் முதல் கட்டமாக 10,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.