இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
இன்று (31) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 1.43% குறைந்துள்ளதுடன், அதன்படி அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 81.13 டொலர்களாகக் காட்டப்பட்டுள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.
இந்நிலையில், எரிபொருளின் விலை குறைவதாக கருதி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவுக்கு ஓடர்களைச் செய்யாததால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யானது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.