ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின்
தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவர்கள் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.